Pages

Monday, July 11, 2011

துருக்கி லிபிய போராளிகள் அமைப்பை அங்கீகரி்த்துள்ளது...

துருக்கி லிபியாவின் கடாபிக்கு எதிராக போராடிவரும் போராளிகள் அமைப்பான தேசிய இடைக்கால கவுன்சிலைஅங்கீகரித்துள்ளதுடன் லிபிய தலைநகர் திரிபோலியில் அமைந்திருந்த துருக்கி தூதுவர் அலுவலகத்தை மூடியுள்ளது. அதேவேளை துருக்கி அரபு -துருக்கி வங்கியில் உள்ள லிபியாவின் சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது .

பதவியில் தொடர்ந்து நீடிக்கப் போகும் யென் ஜனாதிபதி!!

 தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலிஹ் ஒரு மாதத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சில்நேற்று தோன்றி உரையாற்றியுள்ளார். யெமன் ஜனாதிபதி  ஸாலிஹ் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி வெள்ளிகிழமை அவரின் ஆடம்பர மாளிகை மீது இடம்பெற்ற செல் தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில் சவூதி அரேபியாவின் இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

துருக்கி தனது இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டை மீண்டும் வலியுருத்தியுள்ளது..

துருக்கியில் மூன்றாவது தடவையாக பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப்அர்துகான் இஸ்ரேலுடன் சுமூக உறவை ஏற்படுத்துவதை நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.

அல் கைதாவை அடியோடு அழிப்பேன் - அமெரிக்க புதிய பாதுகாப்பு அமைச்சர் அறைகூவல்....

அமெரிக்காவின் சி.ஐ.ஏ.  உளவு நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்தவர் லியோன் இ பனேட்டா. இவரது தீவிர முயற்சி மற்றும் அறிவாற்றலால்தான் பாகிஸ்தான் அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதை தொடர்ந்து ராபர்ட் கேட்ஸ்சுக்கு பதிலாக புதிய ராணுவ மந்திரியாக பனேட்டா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்றவுடன் முதன் முதலாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் வந்தார்.   அங்கு, முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பலஸ்தீன் தனி நாடாக மாற 128 நாடுகளின் ஆதரவு அவசியம் - Muslims Base

ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.

பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது. 

அமெரிக்கா மனித உரிமை மீறலில் முன்னிலையில் - மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையாயின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ.புஷ்ஷின் காலத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதியின் சோகம்

"சவூதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள்' என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக, தற்காலத்தில் நவீன வசதிகள் அதிகரித்து, மக்களின் உடலுழைப்பு வெகுவாக குறைந்து விட்டது. மேலும், எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிக அளவு பயன்படுத்துதல் போன்ற காரணங்களால், மக்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சவுதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் என, தெரியவந்துள்ளது.