தாக்குதல் செய்திகேட்டு உடன் விரைந்த நேட்டோ உலங்கு வானுர்திகளின் துணையுடன் ஆப்கானிய அரச கொமாண்டோக்கள் பதில் தாக்குதலை நடாத்தி தலிபான்களை கொன்றதோடு பொதுமக்களையும் காப்பாற்றியுள்ளனர். ஆப்கானிய பாதுகாப்பு உயர்மட்ட கூட்டம் நடைபெற்ற போதே மேற்படி தாக்குதல் நிகழ்த்தப்பட்டமையானது, போராளிகளின் இலக்கு பொதுமக்கள் அல்ல என்பதும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் என்பதும் தெளிவான உண்மையாகும்.
ஆனால் மேற்கத்தைய ஊடகங்கள் பொது மக்கள் பலியானதை ஆதாரமாக காட்டி போராளிகள் பொதுமக்களை கொன்றொழித்ததாக பிரச்சாரம் செய்துள்ளன. 2014ல் ஆப்கானில் இருந்து அந்நிய படைகள் வெளியேறும் எனும் ஒபாமாவின் அறிவிப்பு வெளியாகி 72 மணிநேரத்தினுல் மேற்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment