Pages

Saturday, July 2, 2011

சிரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் 24 பேர் பலி..

வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹோம்ஸிலும் பிரிதொரு நகரான ஹனாவிலும் திரண்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் அஸாத்திற்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு அணிவகுத்துச் சென்றனர். ”அஸாத் அழைத்த பேச்சுக்களை ஏற்க மாட்டோம்”, ”40 ஆண்டுகள் சிரியாவை ஆண்ட குடும்பமே ஆட்சியை மக்களிடம் தா” போன்ற கோஷங்களுடன் சுமார் 200000 மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் பங்கு பற்றினர்.


பொலிஸாரின் தடையையும் மீறி முன்னேற முயன்ற மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாத சிரிய கலகமடக்கும் படையினர், ஸ்தலத்திற்கு இராணுவ உதவியை கோரினர். உடன் விரைந்து வந்த இராணுவம் நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 24 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். பெருகி வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு மத்தியில் நேற்று நடாத்தப்பதட்ட ஆர்ப்பாட்டத்தை நசுக்க சிரிய இலகு ரக இராணுவ டாங்கிகளை இராணுவம் உபயோகித்துள்ளது. மக்கள் கூட்டத்தின் முன் இராணுவ டாங்கிகள் மேற்கொண்ட இயந்திர துப்பாக்கிச் சூட்டிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment